ஜம்மு:
ஜம்மு அருகே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவரை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜம்மு அருகே உள்ள தாவி ஆற்றின் குறுக்கே புதியதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தில், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களில் இருவர், அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.