‘‘குமாரசாமி முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை’’ – ஜெகதீஸ் ஷெட்டர்

‘‘குமாரசாமி முதல்வராக தொடர தார்மீக உரிமை இல்லை’’ – ஜெகதீஸ் ஷெட்டர்

பெங்களூரு:

கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக தொடர எந்தவிட தார்மீக உரிமையும் இல்லை என பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதீஸ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 4 பேர் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், சிஞ்சோலி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்றது. மேலும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பா.ஜ., மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணாவை, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்து, மேலும் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் பா.ஜ.,வில் இணையவுள்ளதாக தெரிவித்தனர். இதனால் தற்போது கர்நாடவின் காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணியின் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், இந்த கூட்டணி அரசு அதிகாரத்தில் தொடர்ந்து ஈடுபட எந்த தார்மீக உரிமையும் இல்லை. கர்நாடகாவின் முதல்வராக குமாரசாமிக்கு தார்மீக உரிமை இல்லை. கர்நாடக சட்டப்பேரவையில், பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த ஆட்சி கவிழும் பட்சத்தில் பா.ஜ.,வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது இயற்கை என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்