ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு..!

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு..!

விஜயவாடா:

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபையின் 175 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 151 தொகுதிகளில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

இந்நிலையில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று விஜயவாடாவின் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். வரும் 30ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்.

இந்த விழாவில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்