கொரோனாவுக்கு மருந்து; ரூ.1 கோடி பரிசு

  • In General
  • February 10, 2020
  • 203 Views
கொரோனாவுக்கு மருந்து; ரூ.1 கோடி பரிசு

பெய்ஜிங்:

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என நடிகர் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

சீனா நாட்டின் வுகான் நகரத்தில் உருவாகிய ‘கொரோனா’ வைரஸ், அந்நாட்டில் இதுவரை 908 பேரை பலி வாங்கியது. மேலும் 37,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க 10 நாட்களில் 1,000 ப டுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு உருவாக்கியது.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ள £ர். அதில், இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம். என்னைப் போன்று பலரும் இதனை நம்புகின்றனர். அதனால் வைரசை கட்டுப்படுத்த விரைவில் ஒரு மாற்று மருந்தை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

இவ்வாறு தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கே £டி ரூபாய் அளிப்பேன். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்