புதுடெல்லி:
பா.ஜ.,வின் தேசிய செயல்தலைவராக இருந்த ஜெ.பி.நட்டா, தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்றார்.
புதுடெல்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சியின் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் தேர்தல் நடைபெற்றது. எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஜெ.பி.நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வ £ழ்த்து தெரிவித்தார்.