நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை சம்மன்

  • In Cinema
  • February 10, 2020
  • 208 Views
நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை சம்மன்

சென்னை:

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன் நெய்வேலி சுரங்கத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமானவரித்துறையினர் அழைத்துச்சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரின் வீடுகளில் நடந்த சோதனை நடைபெற்றது. மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கைப்பற்றப்பட்டது. சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அ ந்த அறிக்கையில் ரூ.300 கோடி வரையில் வருமானம் மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய், அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏஜிஎஸ் நிர்வாகிகள் உள்ளிட்டே £ருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால், நாளை ஆஜராவதாக நடிகர் விஜய் தரப்பில் வருமான வரித்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்