பெங்களூரு:
நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமானவரித்துறை நடத்திய அதிரடி சே £தனையில் கணக்கில் வராதா கோடிக்கணக்கான ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுமாகி, தெலுங்கு மற்றும் தமிழில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போத கார்த்தி நடிக்கும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, ஒரு படத்திற்கு ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்குவத £கவும், அதனை பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஷ்மிகாவின் பெங்களூரு வீட்டில் கடந்த 16ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்களை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.