புதுடெல்லி:
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன், இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கே.சிவன் இன்று டெல்லியில் சந்தித்தார்.
குடியரசுத்தலைவர் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில், சந்திராயன் 2 செயற்கைக்கோள் குறித்த விரிவான விளக்கத்தையும், அடுத்த மாதம் விண்ணில் செலுத்துவது குறித்தும் சிவன் தெரிவித்தார்.
சந்திராயன் 2 செயற்கைகோளை அனுப்பி வெற்றிபெற இஸ்ரோ தலைவவருக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.