ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான் -2 விண்கலம், அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு தயாராக இருந்தது.
இதற்கு 20 மணி நேரம் கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.
இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான்- 2 கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.