தொலைபேசி மூலம் நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி

  • In Cinema
  • September 20, 2019
  • 211 Views
தொலைபேசி மூலம் நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி

ஆஸ்திரேலியா:
வருமான வரித்துறை போன்று தொலைபேசி மூலமாக பேசி நடிகை இஷா ஷர்வானியிடம் ரூ.3 லட்சத்தை ஏமாற்றிய டெல்லியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை இஷா தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

இவரது போனுக்கு சில நாட்கள் முன்னர் ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஆஸ்திரேலியா வருமான வரித்துறையில் இருந்து பேசுவதாகவும், உடனடியாக வருமான வரி கணக்கில் தவறுகள் இருப்பதால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று பேசியுள்ளார்.

மேலும், இந்திய கிளை அதிகாரியிடம் பணம் செலுத்த வேண்டும் என்று அவரது வங்கி கணக்கு எண் கொடுத்துள்ளார்.

நடிகை இஷா ரூ.3 லட்சத்தை தன்னுடைய ஆன்லைன் வங்கி மூலமாக டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா வருமான வரித்துறையிடம் விசாரித்தபோது தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து டெல்லியில் உள்ள சைபர் கிரைம் மூலமாக புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் புனித் சதா, ரிஷாப் கன்னா, பானுஜ் பெரி ஆகியோரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்