பாக்தாத்:
ஈராக்கின் மத்திய பகுதியில் உள்ள சலாடின் மாகாணத்தின் டிர்கிட் அருகே உள்ள எண்ணெய் கிணறு மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
மோசமான வானிலையை பயன்படுத்தி நேற்று மாலை போலீசார் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு, ஐஎஸ் பயங்கரவாதிகள் அல்லாஸ் மற்றும் அருகிலுள்ள அஜில் எண்ணெய் வயல்களைக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.