வெளிநாட்டு தனியார் லீக்கில் இர்பான் பதான்..! வரலாற்று சாதனை..!!

  • In Sports
  • May 16, 2019
  • 195 Views
வெளிநாட்டு தனியார் லீக்கில் இர்பான் பதான்..! வரலாற்று சாதனை..!!

ஜமைக்கா:

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட இர்பான் பதான் தேர்வாகியுள்ளார்.

எந்த இந்திய வீரரும் வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியதில்லை. தற்போது முதல் முறையாக மேற்கு இந்திய தீவுகளில் நடக்கும் கிரீபியன் கிரிக்கெட் லீக்கில் விளையாட இந்திய வீரர் இர்பான் பதான் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு கரீபியன் லீக் கிரிக்கெட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு அணியில் விளையாட வேண்டுமென்றால், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். இதுகுறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் எந்த அணியில் பங்கேற்பார் என அதில் வெளியிடப்படவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்