பாக்தாத்:
அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஜெனரல் கஸ்ஸெம் சொலைமானி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இதனை பழிவாங்கும் நோக்கில் இன்று ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளமான அல் அசாத் விமான தளம் மீது ஈரான் 9 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், ‘எல்லாம் நல்லதற்கே’ என தனது டுவிட்டர் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.