2 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐபிஎல் பைனல் டிக்கெட்!

2 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐபிஎல் பைனல் டிக்கெட்!

ஐதராபாத்:
ஐதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் 2 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது.

ஐபிஎல் டி-20 போட்டியின் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் குவாலிபையர் 2 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில், வரும் 12ம் தேதி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. ஆன்லைனில் இந்த முறை ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 மற்றும் ரூ.5,000 என டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன.

விற்பனை ஆரம்பித்து இரண்டே நிமிடத்தில் இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது. இதனால் ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்