ஒரே ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை!

  • In Sports
  • May 13, 2019
  • 223 Views
ஒரே ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை!

ஐதராபாத்:

சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், ஒரே ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றியை பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது.

இந்நிலையில், 150 ரன்களை இலக்காக களமிறங்கிய சென்னை அணியில், தோனி ரன் அவுட்டாக சென்னை அணி ஆட்டம் கண்டது. எனினும் தொடர்ந்து விளையாடி வாட்சன் 80 ரன்களை குவிந்திருந்தார்.

இதனையடுத்து, கடைசி ஓவரில் களைகட்சிய ஆட்டம், கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால், ஒரே ரன் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

கடைசி நேரம் வரை சென்னை அணிதான் வெற்றிபெறும் என்று நம்பிக்கையில் இருந்துவந்த சென்னை ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்