புதுடெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் தற்போது சிபிஐ., யால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்க ப.சிதம்பரம் தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை உச்ச நீதிமன்றம் மறுத்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ப.சிதம்பரத்தை சிபிஐ ஏற்கெனவே கைது செய்திருப்பதால், முன்ஜாமீன் தொடர்பாக மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.