சான்பிரான்ஸ்சிஸ்கோ:
உலக முதலீடுகளை ஈர்க்க சான் பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, முதலீட்டுத் தூதுவர்களை உருவாக்கி “யாதும் ஊரே” திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க்கில் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் பல்வேறு தொழில் நிறுவனத்தினர் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்தனர்.