ஜகர்தா:
இந்தோனேசியாவில் அதிகபட்ச நிலநடுக்கமான 6.8 என ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தென்மேற்கு கடற்கரையின் பான்டன் மாகாணத்திலிருந்து 151 கி.மீ., தொலைவில் மையமாகவும், 42.8 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிகக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தலைநகரின் ஜகர்தாவில் கட்டிடங்கள் ஒரு நிமிடம் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான்டன் கரைக்கரையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.