இந்தோனேசியா:
கதைகளை சொல்லும் ஆரம்பகால குகை ஓவிய சித்திர பதிவுகள் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சுலவேசி தீவில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியமானது. 44,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த ஓவியத்தில் விலங்கு குணாதசியங்களை கொண்ட எட்டு பேர் வனப்பகுதியில் உள்ள 6 பன்றிகளை, ஈட்டி மற்றும் கயிறுகளை கொண்டு துரத்தி சென்று வேட்டையாடும் விதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.