ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் கிருஷ்ணா காதி பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதில், இந்திய வீரர் நாயக் ரவி ரஞ்சன் குமார் சிங் வீர மரணமடைந்தார்.