இந்தியா அபார வெற்றி

  • In Sports
  • October 22, 2019
  • 187 Views
இந்தியா அபார வெற்றி

ராஞ்சி:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தயா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்களுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களும், 2-வது இன்னிங்சில் 133 ரன்களும் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், 4 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை ராஞ்சி மைதானத்தில் தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்