இந்திய அணி அபார வெற்றி

  • In Sports
  • November 8, 2019
  • 188 Views
இந்திய அணி அபார வெற்றி

ராஜ்கோட்:

வங்கதேசத்துக்கு எதிரான டி20ஐ 2வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி தற்போது டி20ஐ போட்டியில் விளையாடி வருகிறது. முதல் நாள் போட்டியில் இந்தியாவை வென்ற வங்கதேச அணி நேற்று 2வது போட்டியில் இந்தியாவுடன் எதிர்கொண்டது.

ராஜ்கோட்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து 154 ரன்கள் இலக்காகக்கொண்டு இந்திய அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 31 ரன்களும், ரோஹித் சர்மா 85 ரன்களையும் எடுத்து அவுட்டாகினர். இதனைத்தொடர்ந்து விளையாடிய கே.எல்.ராகுல் 8 ரன்களும், எஸ்எஸ் ஐயர் 24 ரன்களும் எடுத்து இலக்கை எட்டினர்.

இந்திய அணி 15.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்