இந்தியாவின் அதிரடி..! இலங்கைக்கு அடியோ அடி..!!

  • In Sports
  • July 6, 2019
  • 175 Views
இந்தியாவின் அதிரடி..! இலங்கைக்கு அடியோ அடி..!!

லீட்ஸ்:

இந்தியாவின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடக்கும் 44வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் இந்தியா மோதியது.

முதலில் டாஸ் வென்று பேட்டியிங்கில் களமிறங்கி இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணியத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுலும் ரோஹித்தும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். 30வது ஓவர் வரை இருவரும் 189 ரன்களை சேர்த்தனர். பின்னர் 31வது ஓவரில் ரோகித் ஷர்மா 94 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து மேத்திவ்சிடம் கேட்சானார்.

இதனையடுத்து, களமிறங்கிய கோலியுடன் விளையாடிய ராகுல் 118 பந்துகளுக்கு 111 ரன்கள் விலாசி பெரேராவிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் களத்தில் குதித்த ரிஷப் பந்த் முதல் பந்துலேயே பவுண்டரியை அடித்து அடுத்த பாலில் வெளியேறினார். அவருக்குப்பின் ஹர்திக் பாண்டியா 4 பந்துகளில் 6 ரன்னுடனும் கோலி 41 பந்துகளில் 34 ரன்களை எடுத்து 43.3 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 265 ரன்களை எடுத்து இந்திய அணி இலங்கை அணியை தோற்கடித்தது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்