4வது டி20 போட்டி: இந்திய அணி வெற்றி

4வது டி20 போட்டி: இந்திய அணி வெற்றி

வெல்லிங்டன்:

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது.

நியூசிலாந்து சுற்றுபயணமாக சென்றுள்ள இந்திய அணி டி20 ஐந்து போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை குவித்துள்ளது. இந்நிலையில், 4வது போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டனில் உள்ள ஸ்கை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் 39 ரன்களுடனும், சாம்சன் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். கோலி 11, எஸ்எஸ்.ஐயர் 1, துபே 12, சுந்தர் 0, தாகூர் 20, சகல் 1 ரன்களுடனும் அவுட்ட £கினர். பாண்டே 50 ரன்கள், சைனி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை குவித்தது.
இதனையடுத்து, 166 ரன்களை இலக்காகக்கொண்டு விளையாடி நியூசிலாந்து அணி, 20வது ஓவர் முடிவில் 165 ரன்களை எடுத்து போட்டி சமனில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியுடனான டி20, 5 போட்டிகளில் தொடர்ந்த 4 போட்டியை இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்