போட்செஃப்ஸ்ட்ரூம்:
ஜுனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 172 ரன்களை எடுத்துள்ளது.
19 வயதுக்கு குறைவான ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் இன்று அரையிறுதிப்போட்டியை விளையாடி வருகிறது.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கில் களமிறங்கியது. இதனையடுத்து, இந்தியாவின் பந்து வீச்சில் 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனைத்தொடர்ந்து, 173 ரன்கள் இலக்காக இந்திய அணி பேட்ங்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால் மற்றும் சக்சேனா களமிறங்கியுள்ளனர்.