மான்செஸ்டர்:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா பந்துவீச்சில் இறங்கியது.
இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில், ஐசிசி உலகக்கோப்பை தொடரின், இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப்போட்டி மழையால் நேற்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் தொடர்ந்து மழை நீடித்ததால், இந்த போட்டி இன்று விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாலை 3 மணிக்கு இந்தியாவுக்கு எதிராக 46.1 ஓவரிலிருந்து தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.