மழை குறுக்கீடு..! இன்று மீண்டும் தொடரும் போட்டி!

  • In Sports
  • July 10, 2019
  • 197 Views
மழை குறுக்கீடு..! இன்று மீண்டும் தொடரும் போட்டி!

மான்செஸ்டர்:

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா பந்துவீச்சில் இறங்கியது.

இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில், ஐசிசி உலகக்கோப்பை தொடரின், இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப்போட்டி மழையால் நேற்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் தொடர்ந்து மழை நீடித்ததால், இந்த போட்டி இன்று விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாலை 3 மணிக்கு இந்தியாவுக்கு எதிராக 46.1 ஓவரிலிருந்து தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்