மான்செஸ்டர்:
உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடக்கும் இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா பந்துவீச்சில் இறங்கியது.
இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்த நிலையில், ஐசிசி உலகக்கோப்பை தொடரின், இந்தியா நியூசிலாந்து அரையிறுதிப்போட்டி மழையால் நேற்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தியாவுக்கு எதிராக 46.1 ஓவரிலிருந்து தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபட்டது நியூசிலாந்து அணி. 50வது ஓவரின் முடிவில் 239 ரன்களை எடுத்து 240 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது.
இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்து பந்து வீச்சில் தொடர்ந்து ரன்களை குவிக்க திணறிவந்தது.
கே.எல்.ராகுல், ரோஹித் மற்றும் கோலி தலா ஒரு ரன்களுடன் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீரர்களும் அவுட்டாகினர். தோனி மற்றும் ஜடேஜா பார்டனர்ஷிப்பில் வெற்றியின் இலக்கை நோக்கி நகர்த்தினர். இதனைத்தொடர்ந்து ஜடேஜாவும் தோனியும் அவுட்டாகினர்.
இதனைத்தொடர்ந்து, 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி தோல்வியை தழுவியது.