அரையிறுதிக்குள் இந்தியா அணி..!

  • In Sports
  • July 3, 2019
  • 181 Views
அரையிறுதிக்குள் இந்தியா அணி..!

பர்மிங்கம்:

ஐசிசி கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக, இந்திய அணி அபார வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 40வது லீக் ஆட்டம் பர்மிங்கமில் நடைபெற்றுவருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிது.

இந்தப்போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை இந்திய அணி குவித்தது. வங்கதேச அணி 315 ரன்கள் இலக்காகக்கொண்டு களமிறங்கியது.

ஆனால், இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் தாக்குபிடிக்காமல், வங்கதேச அணி 48 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனையடுத்து, உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் 2வது அணியாக நுழைந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்