மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் மொத்தம் 106750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5611 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 140 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3303 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42298 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3124 பேர் குணமடைந்துள்ளனர்.