புதுடெல்லி:
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் தபால் சேவையை அந்நாடு நிறுத்தியதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தபால்துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை பாகிஸ்தான் அரசு நிறுத்தி வைத்துள்ளது என்றும், பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது என்றும் எச்சரித்துள்ளார்.