புனே:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களை குவித்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முதல் நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான இன்று நடந்த ஆட்டத்தில், இந்திய அணி 601 ரன்கள் எடுத்திருந்தநிலையில் டிக்ளேர் செய்தது. கோலி 254 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.