ராஜ்கோட்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 340 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடனான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது. இதனைத்தொடர்ந்து 2வது போட்டி ராஜ்கோட்டி நடைபெற்று வருகிறது.
முதலில் டாஸ் வென்றி ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்ட க்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ஷிகர் தவான் 96 ரன்களும், ரோகித் சர்மா 81 ரன்களிலும் அவுட்டாகினர்.
இதனையடுத்து, இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது.