புனே:
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 201 ரன்களை குவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3வது மற்றும் கடைசி போட்டி புனேயில் நடக்கிறது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும்ம ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கத்தை தந்தது. தவான் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 54 ரன்கள் எடுத்தார்.
சாம்சன் 6 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுடனும் திரும்பினர். விராத் கோஹ்லி 26 ரன்களுடன் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் விளாச, இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 31 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 22 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.