புதுடெல்லி:
இந்தியா பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ‘டை’ சுற்று நவம்பர் இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 55 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்வதாக கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடர் ஒத்திவைகக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் போட்டியின் ‘டை’ சுற்று வரும் நவம்பர் 29 மற்றும் 30ம் தேதிகளிலோ அல்லது நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதியிலோ நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4ம் தேதி பாகிஸ்தானில் பாதுக்காப்பு குறித்து ஆய்வு நடத்தப்படும் என அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.