இந்தியா 296 ரன்கள் குவிப்பு

  • In Sports
  • February 11, 2020
  • 220 Views
இந்தியா 296 ரன்கள் குவிப்பு

மவுண்ட் மவுங்கானுய்:

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 296 ரன்களை குவித்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகளை விளையாட சென்றது. 2 போட்டிகள் விளையாடி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று 3வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. முதலில் ஷா மற்றும் அகர்வால் களமிறங்கினர். 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்களும், எஸ்.எஸ்.ஐயர் 62 ரன்களும் எடுத்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்