சென்னை:
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலிருந்து 65 கோடி ரூபாயை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக மதுரை அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், நடிகர் விஜய் ஆகியோரிடம் தொடர்ந்து 16 மணி நேரமாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிகமான திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவர் அன்புச்செழியன். இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இன்று நடத்திய சோதனையில் அன்புச்செழியன் வீட்டில் இருந்து ரூ.65 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.