புதுடெல்லி:
இந்த ஆண்டின் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில், காவிரியில் தண்ணீர் திறந்துவிடுதல், மேகதாது அணைக்கு எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கபட்டன.
இந்நிலையில், தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்குரிய 9.2 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.