ஐஎம்ஏ மோசடி..! மன்சூர் கான் டெல்லியில் கைது..!!

ஐஎம்ஏ மோசடி..! மன்சூர் கான் டெல்லியில் கைது..!!

புதுடெல்லி:

ஐஎம்ஏ மோசடி வழக்கில் சம்பந்தபட்ட முக்கிய நபரான முகம்மது மன்சூர் கான் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2013ம் ஆண்டு ஐஎம்ஏ நிறுவனத்தை தொடங்கிய முஹம்மது மன்சூர் கான், நடுத்த பிரிவு இஸ்லாமியர்களிடம் பணம், நகையை முதலீடாக பெற்று அதனை ரியல் எஸ்டேட், மருத்துவத்துறை, நகை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்தார். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென இவர் தலைமறைவாகி வீடியோக்களை வெளியிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பானது.

இந்நிலையில், துபாயிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தடைந்த முஹம்மது மன்சூர் கானை சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து, அவரை பெங்களூரு அழைத்துவந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்