ஒசூர் அருகே மகளுடனான கள்ளத்தொடர்பை கைவிட வலியுறுத்தியபோதும் ஊரை சுற்றிவந்ததால், பெண்ணின் தந்தையே கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்து தலைமறைவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளி கிராம பின்புறமாக ஒரு ஆண் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக சூளகிரி போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
விரைந்து சென்ற போலிசார் உடலை பார்த்து விசாரணை மேற்க்கொண்டதில் தொட்டேப்பள்ளி கிராமம் கட்டிடப்பணிகளை செய்துவந்த முரளி(35) என்பவரே உயிரிழந்திருப்பது தெரியவந்தது
மேலும் விசாரணையில் முரளி, பஸ்தலப்பள்ளி கிராமத்தில் திருமணமான லட்சுமி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததால் ஊரில் அவமானம் ஏற்ப்பட்டு லட்சுமியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதும்,
அதன்பின்பும் லட்சுமி, முரளி கள்ளக்காதலை கைவிடாமல் சுற்றிவந்ததால் லட்சுமியின் தந்தை பசப்பா முரளியை பலமுறை எச்சரித்ததாகவும்
இதனால் பசப்பா, முரளிக்கு வாக்குவாதம் ஏற்ப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது
இந்தநிலையில் இன்று மாலை பஸ்தலப்பள்ளி கிராமத்தின் பின்புறமாக முரளி,லட்சுமி தனிமையில் இருப்பதை நோட்டமிட்ட லட்சுமியின் தந்தை பசப்பா தான் கொண்டுவந்திருந்த உருட்டுக்கட்டையால் தாக்கஇ கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பதாக பேசப்பட்டு வருகிறது
முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவதனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்