மர்ம நபர் போலீசார் கண்டுபிடிப்பு

மர்ம நபர் போலீசார் கண்டுபிடிப்பு

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை டெல்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது, மர்ம நபர் ஒருவர் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினார். கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் ப டுகாயமடைந்தார்.

இதுகுறித்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் யார் என டெல்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது மர்ம நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள ஜெவார் ப குதியை சேர்ந்த 19 வயதான ராம் பகத் கோபால் என தெரியவந்துள்ளதாக டெல்லி காவல் துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்