லண்டன்:
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 10 அணிகள் உள்ளிட்ட 46 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த போட்டியில் ஒரு கோடி அமெரிக்க டாலர், அதாவது ரூ.70.11 கோடி பரிசாக வழங்கப்படும். வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.28.05 கோடியும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.14.02 கோடியும், தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ.5.61 கோடி வழங்கப்படவுள்ளது.
இதுதவிர, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் அணிக்கு, ரூ.28 லட்சத்து 5,128 பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.