சென்னை:
தமிழகத்தின் தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்துவோம். முடியாத பட்சத்தில் போராடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.