ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் புறநகர் ரயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். மேலும், ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்களும் ஒரே நடைமேடையில் வந்ததால் விபத்துக்குள்ளானது என தகவல் வெளியாகியுள்ளது.