ஐதராபாத்:
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு, முன்னாள் கேப்டன் அசாரூதீன் மனுதாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் 147 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிடவர் 73 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.