சென்னையில் கணவனை நடுரோட்டில் துவம்சம் செய்த மனைவி!

சென்னையில் கணவனை நடுரோட்டில் துவம்சம் செய்த மனைவி!

சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள பொன்னுவேல்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி.

இதே பகுதியில் தனலட்சுமியின் சித்தி பழக்கடை நடத்தி வந்தார். எனவே சித்தியின் பழக்கடைக்கு சென்று தினமும் பேசும் வழக்கத்தை கொண்டிருந்தார் தனலட்சுமி. இதனால் சரியாக சமையல் செய்யாமல், அவ்வப்போது மட்டும் கணவருக்கு சமைத்து போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தனலட்சுமி சமைத்த சமையல் ருசியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் நல்ல ருசியுடன் சமைக்குமாறு கூறி உள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் சித்தி வரவே, தனலட்சுமி கரண்யால் கணவனை சாத்து சாத்து என சாத்தி உள்ளார். அடி தாளாமல் கார்த்தி வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத தனலட்சுமி, நடுரோட்டில் கணவனை புரட்டி எடுத்துள்ளார்.

இது குறித்து கார்த்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்