மனைவியை வெட்டிவிட்டு காவலர் தற்கொலை

மனைவியை வெட்டிவிட்டு காவலர் தற்கொலை

சென்னை:
குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த காவலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் நரேஷ், இவருக்கு ஜெயஸ்ரீ என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு வருண் என்ற மகன் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் சண்டையால் கோபித்துக் கொண்ட ஜெயஸ்ரீ பெரம்பூரில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

அங்கு சென்ற நரேஷ் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படாததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர்.

அப்போது வெட்டு காயங்களுடன் ஜெயஸ்ரீ உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும், நரேஷ் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்