கணவனுக்கு 71 ஆடு பரிசளித்த பஞ்சாயத்து

கணவனுக்கு 71 ஆடு பரிசளித்த பஞ்சாயத்து

கோரக்பூர்:
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகே உள்ள பிப்ரியாச் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ரமேஷ் என்பவருடன் சில நாட்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆனால் அந்த பெண் உமேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தன்னுடைய கணவனின் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார்.

மனைவி காணாமல் போனதால் பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது தனது மனைவி மற்றொருவருடன் வாழ்ந்து வருவதை கண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தை கிராமப் பஞ்சாயத்துக்கு கணவன் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது பஞ்சாயத்தில் விசாரணை நடைபெற்ற போது, அந்த பெண் தனது கணவருடன் வாழ விருப்பமில்லை, கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை செய்து வைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

அப்போது நான் என்னுடைய காதலருடன்தான் வாழ்வேன் என்று திட்டவிட்டமாக கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு அந்த பெண்ணின் கணவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் காதலரிடம் 71 ஆடுகளை அந்த பெண்ணுக்கு ஈடாக அவரின் கணவருக்கு வழங்கி விட்டு உன்னுடைய காதலனுடன் போகலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், ஆடுகள் வழங்க முடியாவிட்டால், அந்த பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழ விட வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி அந்த பெண்ணின் காதலர் தன்னிடம் இருந்த 71 ஆடுகளை அந்த பெண்ணின் கணவருக்கு கொடுத்துவிட்டு அந்த பெண்ணை அழைத்து வந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த உத்திர பிரதேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்