சென்னை மெரினா போராட்டம்; பா.ஜ.,வினர் கைது

சென்னை மெரினா போராட்டம்; பா.ஜ.,வினர் கைது

சென்னை:

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜ., தேசிய செயலர் எச்.ராஜா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, எச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்