ஒசூர் அருகே தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் ஒன்றியகுழு தலைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – பாகலூர் மாநில நெடுஞ்சாலை சமத்துவபுரம் முதல் அனுமந்தபுரம் கிராமம் வரையிலான மண்சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்ததால்
மண்சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென தமிழக அரசிற்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று காலை ஒசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி அவர்கள் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில் ஒசூர் ஒன்றிய அலுவலர் ஆப்தாப் பேகம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர், நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வைத்த தமிழக அரசிற்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.