ஓசூரில் தொடர் கொள்ளையர்கள் சிக்கினர்,

ஓசூரில் தொடர் கொள்ளையர்கள் சிக்கினர்,

ஓசூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு கொள்ளையர்கள் கைது, 63 சவரன் தங்கநகை பறிமுதல் : திருட்டு நகைகளை வாங்கி வந்த அடகுக்கடைக்காரர்கள் 4 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் இரயில்வே நிலையம், ஹட்கோ, மத்திகிரி, சிப்காட் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்துள்ளது மத்திகிரி போலிஸ்

வாகன தணிக்கையின் போது சிக்கிய இரண்டு கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(29), மதுசூதனன் (24) என்பது தெரியவந்துள்ளது அவர்களிடமிருந்து 63 சவரண் தங்கநகைகள் பறிமுதல் செய்து

போலிசாரின் தொடர் விசாரணைக்கு பிறகு வீடுகளில் கொள்ளையடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளிநகைகளை ஓசூர், சூளகிரி, அத்திமுகம் பகுதிகளில் அடகுகடைக்காரர்களிடம் விற்றுவந்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் திருட்டு நகைகளை வாங்கி விற்பனை செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்த நகை அடகுக்கடைக்காரர்கள் ராகேஷ்(21), கணேஷ் (25), சுரேந்தர் சிங் (25) ராஜேந்திரகுமார் (55) ஆகிய 4 பேரையும் கைது செய்து மத்திகிரி போலிசார் விசாரித்து வருகின்றனர்

2 கொள்ளையர்கள், 4 அடகுக்கடைக்காரர்கள் என 6பேர் கைது செய்துள்ள மத்திகிரி போலிசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்